கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் இலங்கை வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சந்தேகநபர், துபாயிலிருந்து வருகை தந்த பின்னர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரம் மற்றும் சுங்க அறிவிப்பு இன்றி தங்கத்தை வெளியே கொண்டு செல்ல முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்க சங்கிலிகள், 10 வளையல்கள் மற்றும் 2 தங்க கட்டிகள் உட்பட 271.48 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க தடுப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சுங்க பரிசோதனையின் பின்னர் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பயணிக்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
