ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் எஸ். ஏ. நிமல் சரணதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பி. சனத் பூஜித, ஈ. ஆர். வீரகோன், ஆர். கேதீஸ்வரன், ஜே. எம். ஆர். ஜயசுந்தர, ஈ. ஏ. பி. என். எதிரிசிங்க, வைத்தியர் எஸ். ஏ. ஏ. என். ஜயசேகர மற்றும் எம். எச். முகமது சமீல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்குரிய நியமனக் கடிதங்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து புதிய உறுப்பினர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
அரச சேவை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நிலவிய உறுப்பினர் வெற்றிடங்களுக்காகவே இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
