(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆடைகளை களைந்து தன்னுடைய கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்த நபர் ஒருவரை பொதுமக்கள் பொலிஸாருடன் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (10) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் திடீரென தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்து, பிளேற்றினால் தனது கழுத்தை தானே வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்ததையடுத்து, பொதுமக்கள் பொலிஸாருடன் இணைந்து அவரை பிடித்து கை கால்களை கட்டி 1919 அம்புலன்ஸசில் ஏற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபர் கொக்கட்டிச்சோலை முதலைக்குடா தாளையடித் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய மகேந்திரன் அருள் எனவும், மனநோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இது தொடர்பாக மட்டு தலைமையக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
