போசாக்கு மாதத்தை முன்னிட்டு, சிறுவர்களின் மந்தபோசனம் மற்றும் பட்டினியை ஒழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், கொட்டகலை டெவோன் வேல்ட் விஷன் நிறுவனத்தினால் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை பிரபலப்படுத்தும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வு கொட்டகலை ஈரநில வாவிப் பகுதியில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, கொட்டகலை நகரிலிருந்து ஈரநில வாவி வரை விழிப்புணர்வு நடைபவனி நடத்தப்பட்டதுடன், மாணவர்களின் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
தொடர்ந்து, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்ற சத்தான சிற்றுண்டி வகைகள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதில் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் நுவரெலியா மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர், தலவாக்கலை பிரதேச செயலாளர், கொட்டகலை பிரதேச சபை தலைவர், கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி, வேல்ட் விஷன் நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர், அரச திணைக்கள அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெருந்தோட்ட பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
