அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், தரம் 11 மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நேற்று (09) பாடசாலை முடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல்களின்படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் மற்றொரு மாணவரை கத்தியால் தாக்க முயன்றதாகவும், அப்போது அருகிலிருந்த மாணவர்கள் அதனைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் குறித்த மாணவர்கள் கல்லால் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர் முதலில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
