இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நேர்மறையான வளர்ச்சி, சர்வதேச சந்தையில் நாட்டிற்கான நல்லங்கீகாரத்தையும் நம்பிக்கையையும் மேலும் உயர்த்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் இலங்கை அடைந்துள்ள பலமான பொருளாதார மீட்சிக்கு, உலக வங்கி இலங்கையை மீண்டும் ‘உயர் நடுத்தர வருமான’ (Upper-Middle-Income) நாடாக தரம் உயர்த்தியுள்ளதே சிறந்த சான்றாகும் என அட்வகாட்டா நிறுவனத்தின் (Advocata Institute) ஆய்வு ஆலோசகர் கலாநிதி சுதாரக்க ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் பதிவான 5% அளவிலான பொருளாதார வளர்ச்சி (Real GDP Growth) இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இலங்கையின் இந்த புதிய பொருளாதார முன்னேற்றம் காரணமாக, உலகளாவிய ரீதியில் நாட்டின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என ஏனைய பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
