ஹோர்முஸ் கடற்பரப்பில் வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தங்களால் ஏற்பட்ட தவறு என ஈரான் தெரிவித்துள்ளது.
வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா இரண்டு கட்டங்களாக ஈரான் மீது பாரிய தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 14 பேர் உயிரிழந்ததுடன் பெருமளவு சொத்து சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஈரானும் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது அமைதி பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க முயன்ற ஒரு குழுவினரின் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் கடல்சந்தி திறந்திருப்பதாக ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும், வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக உறுதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும், ஹோர்முஸ் கடல்சந்தி தொடர்பான பதற்ற நிலை தொடர்ந்தாலும் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து முன்னெடுக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
