பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் உடல் இன்று (12) காலை அவரது இல்லத்திலிருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூரிலுள்ள மகாராஜா கல்லூரி மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு பொதுமக்கள், கலைஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.00 மணியளவில் மைசூரில் அமைந்துள்ள அவரது தோட்டத்தில் கர்நாடக அரசின் முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
