பிரான்ஸ் கால்பந்து அணி குறித்து ஸ்பெயின் முன்னாள் பிரதமர் மரியானோ ரஜோய் வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கிண்ண அரையிறுதியில் ஸ்பெயின்–பிரான்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், “பிரான்ஸ் அணியில் பிரெஞ்சு வீரர்கள் இல்லை” என ரஜோய் தெரிவித்த கருத்து இனவாதமாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்கு பிரான்ஸ் அரசாங்கம், பிரெஞ்சு கால்பந்து சம்மேளனம் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர், “பிரான்ஸுக்கு ஒரு குறிப்பிட்ட தோல் நிறம் கிடையாது; இத்தகைய கருத்துகள் இனவாதம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாகவும் பிரான்ஸ் அணி வீரர்கள், குறிப்பாக கிலியன் எம்பாப்பே, இனவாத விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
