ஹோர்முஸ் நீரிணையில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய அரபு இராச்சியம், கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு 20% மேலதிக கட்டணம் விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
