16 மற்றும் 17 வயதுடையோருக்காக நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை சமூக ஊடக பயன்பாட்டை இயல்புநிலை (Default) அடிப்படையில் கட்டுப்படுத்தும் புதிய நடைமுறையை பிரிட்டன் அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், தொடர்ந்து காணொளிகள் தானாக இயங்கும் (Auto-play) போன்ற அம்சங்களும் இயல்பாகவே முடக்கப்படும். இளைஞர்களின் தூக்கத் தரத்தை மேம்படுத்தவும், கல்வியில் கவனம் செலுத்தவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடவும் இந்த நடவடிக்கை உதவும் என தொழில்நுட்ப அமைச்சர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதிமுறைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், 2027ஆம் ஆண்டு வசந்த காலம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
