நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரை, உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான பேரணி நடத்தி மனு ஒன்றை கையளிக்க உள்ளதாக சோனம் வாங்சுக் முன்னதாக அறிவித்திருந்தார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், போராட்டம் நடைபெறும் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
