நாட்டில் வருடம்தோறும் 50க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (18) கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், மின்னல் விபத்துகளால் ஆண்டுதோறும் சொத்துக்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்படுவதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.
