ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதலில், 2 அமெரிக்கப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில், நான்கு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ள நிலையில், ஒரு வீரர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான், குவைத் மற்றும் பஹ்ரைனிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம் அமெரிக்கா, ஈரானின் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளைத் தாக்குவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், பொதுமக்களின் உட்கட்டமைப்புகளைத் தாக்குவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வளைகுடா ஒத்துழைப்பு பேரவை, இந்தத் தாக்குதல்களைப் போர்க்குற்றம் என்று கடுமையாகச் சாடியுள்ளது.
