பங்களாதேஷில் நடைபெற்று வரும் 10ஆவது தெற்காசிய காராத்தே போட்டித் தொடரில், 21 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஹெசலி பிமன்யா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கினிகத்தேன மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான ஹெசலி பிமன்யா, கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று இந்தச் சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
இப்போட்டித் தொடரில் இலங்கை சார்பில் 36 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
21 வயதுக்குட்பட்ட மகளிருக்கான காராத்தே பிரிவில் இந்தியா முதலிடத்தையும், பங்களாதேஷ் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
