தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் வெல்லமடம பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (19) பிற்பகல் 3.50 மணியளவில் மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிப் பயணித்த சொகுசு ஜீப் வாகனமும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கி சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது ஜீப் வாகனத்தில் ஐவரும், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட இருவருமாக மொத்தம் ஏழு பேர் பயணித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மாத்தறை – ஹித்தெட்டிய மத, வெவஹமந்துவ பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
