செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 41ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது.
இதன்போது 7 மனித என்புகூடுகள் வியாழக்கிழமை (23) அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 9 மனித என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழியில் இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 464 என்பு கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
