இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் வருகிற நவம்பர் 9 ஆம் திகதி ஸ்பெயினின் பார்சிலோனாவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திருமணம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சுமார் 100 விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், திருமணத்திற்குப் பின்னர் சென்னையில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக நடிகரும் தயாரிப்பாளருமான ஒய்.ஜி. மகேந்திரன், அனிருத் – காவ்யா மாறன் திருமணம் தொடர்பான தகவலைப் பொதுவெளியில் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும், அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்து திருமணத் திகதி மற்றும் நிகழ்வு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
