நிலவும் கடுமையான வறண்ட காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தில், மஹாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், தெல்தெனிய பழைய நகரத்தின் இடிபாடுகள் மீண்டும் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 35.14% ஆகக் குறைந்துள்ளதாகவும், நீர்மட்டம் கடல் மட்டத்திலிருந்து 410.78 மீட்டராகக் குறைந்துள்ளதாகவும் நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம் 438.04 மீட்டர் ஆகும்.
அந்த அளவை எட்டும்போது, அதன் எட்டு தானியங்கி நீர் வெளியேற்றும் கதவுகளில் முதலாவது திறந்து, நீர் வெளியேற்றம் நிகழ்கிறது.
தற்போது, நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 256.03 மில்லியன் கன மீட்டராகக் குறைவடைந்துள்ளது.
மேலும், நீர்த்தேக்கத்திற்குள் நுழையும் நீரின் அளவை விட மூன்று மடங்கு நீர் தினமும் வெளியேற்றப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
நீர்மட்டம் குறைந்து வருவதால், நீர்த்தேக்கத்திற்குக் கீழே இருந்த, போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பழைய சாலைகள் மற்றும் பாலங்கள் உட்பட, நகரத்தின் பல இடிபாடுகளை இப்போது மீண்டும் காண முடிகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
