இன்று (04) அதிகாலை எல்லை, கவறவெல பகுதியில் லொறி ஒன்று தெமோதர ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த சாரதி முதலில் தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகளை எல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
