கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கபிட்டி ரஜமஹா விகாரையின் 183ஆவது வருடாந்த எசல பெரஹராவை முன்னிட்டு, இன்று (28) இரவு கடுவலை – கொள்ளுப்பிட்டி மற்றும் கடுவலை – கொழும்பு (புறக்கோட்டை) பிரதான வீதிகளில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இறுதிப் பெரஹரா இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (29) அதிகாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.
பெரஹரா, விகாரையிலிருந்து புறப்பட்டு கடுவலை – கொள்ளுப்பிட்டி வீதி, கொத்தலாவல ராஜசிங்க வீதி, கடுவலை – புறக்கோட்டை வீதி மற்றும் கடுவலை சந்தி வழியாக மீண்டும் விகாரையை வந்தடையும்.
இதனால், பெரஹரா நடைபெறும் நேரத்தில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கடுவலை – புறக்கோட்டை வீதி, சந்திரிகா குமாரதுங்க வீதி, பியகம வீதி மற்றும் பண்டாரவத்தை வழிகள் மாற்று போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளன.
