சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் மரம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
இன்று (30) வியாழக்கிழமை பிற்பகல் வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
மரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
