(கனகராஜா சரவணன்)
மட்டு வெல்லாவெளி 35 ம் கொலனியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (6) இரவு இடம் பெற்றுள்ளதாகவும் பொலிசாரின் மோட்டர் சைக்கிள் ஒன்றை காணாமல் போயுள்ளதையடுத்து பெரும் பதற்றம்.
இது பற்றி தெரியவருவதாவது
குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் செயற்பட்டு வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் ஜீப்வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் 7 பர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் 35 ம் கொலனியில் உள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து அங்கு முற்றுகையிட்ட பொலிசார் மீதுகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களின் உறவினர்களான பெண்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினர் பொலிசார் மீது பொல்லுகளால் தாக்குதல் நடாத்தி அவர்களை கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட விடாமல் தடுத்தனர்.
