ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவராகக் கருதப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மற்றும் மேலும் நான்கு பேருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னெடுக்க முடியாது என கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தப்பிச் செல்ல சதித்திட்டம் தீட்டியதாக குறித்த சந்தேகநபர்கள் மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை முன்னெடுக்க முடியாது என்றாலும், குற்றவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏனைய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரிப்பதற்கு சட்டரீதியான தடையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் தரப்பு முன்வைத்த ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
