யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (02) அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மடு மாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட நிலையில், வெடிக்காமல் இருந்த பட்டாசு ஒன்றை மீண்டும் வெடிக்கச் செய்ய குறித்த இளைஞர் முயற்சித்துள்ளார்.
இதன்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
