மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் உள்ள நீரேந்துப் பகுதிகளுக்கு பெய்து வரும் கடும் மழையினால், காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்த்தேக்கங்கள் நிரம்பும் நிலைக்கு அருகில் சென்று வருவதாக அவற்றுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மவுசாகலை நீரேந்துப் பகுதிகளில் 25 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், நீர்த்தேக்கம் நிரம்புவதற்கு மேலும் 31 அடி 2 அங்குலம் இடைவெளி காணப்படுவதாக இலங்கை மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பும் நிலைக்கு மேலும் 16 அடி 2 அங்குலம் காணப்படுவதாகவும், இன்று (02) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் அப்பகுதியில் 26 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
