அத்துடன், குறித்த கடற் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பான தன்மையுடன் காணப்படும்.
அதேநேரம், குறித்த கடற்பரப்புகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, குறிப்பிடப்பட்ட கடல் பகுதிகளின் பாதுகாப்பு நிலைமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகினறனர்.
எனவே, மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகவோ அல்லது ஏனைய கடற்பயணங்களுக்காகவோ செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
