சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
அதன் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான பிரதீப் கொடிப்பிலி, பாதுகாப்பான 9 தற்காலிக முகாம்களில் 1,881 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
