மேல் கொத்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழை பெய்யும் பட்சத்தில், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் தானாகவே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீர்த்தேக்க அணைக்கட்டின் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இருபுறங்களிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, அப்பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் சென் கிளயர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
