நாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா வழங்கிய ‘மெலத்தியன்’ திரவத்தைப் பயன்படுத்தும் பணிகள் இன்று (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை நாட்டில் 87,536 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் 137 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
