பிரபல பொலிவுட் நடிகை தபு, தனது பெயர், புகைப்படம், உருவம் மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக நோக்கில் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது ஆளுமை உரிமைகள் மீறப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அனுமதியின்றி தனது அடையாளத்தை பயன்படுத்துவதற்கு நிரந்தரத் தடை விதிக்குமாறு கோரியுள்ளார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் காணொளிகள், படங்கள் உள்ளிட்ட தவறான டிஜிட்டல் உள்ளடக்கங்களை இணையத்தளங்களில் இருந்து அகற்ற உத்தரவிடுமாறும் மனுவில் தெரிவித்துள்ளார்.
