அவிசாவளை, உக்வத்தை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீதாவக்கபுர குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகநபரிடமிருந்து 1,050 மதனமோதக மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
