மஸ்கெலியா பிறவுண்லோ தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
மஸ்கெலியா பிரதேச சபை பிரதித் தவிசாளர் ராஜ் அசோக்கின் வேண்டுகோளுக்கு அமைய, இரண்டு அடி உயரம் கொண்ட சிவலிங்கம் பீடத்துடனும், நந்தி பீடத்துடனும் ஆலய பரிபாலன சபை நிர்வாகத்திடம் நேற்று முன்தினம் (04) மாலை கையளிக்கப்பட்டது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்களுடன் நேரில் வருகை தந்து மஸ்கெலியா ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் சிலைகளை வழங்கினார்.
