பிரபலமான வர்த்தகப் பெயரொன்றை தவறாக பயன்படுத்தி இணையவழி வணிகத் திட்டம் ஒன்றின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ. 426,300 நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (Computer Crimes Investigation Division) வடமேல் மாகாண உப பிரிவினர் நேற்று (08) இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மோசடி செய்யப்பட்ட மொத்த தொகையில் ரூ. 186,500 குறித்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
