பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மற்றும் மிகிந்தலை நோக்கிப் பயணிக்கும் பக்தர்களின் நலன்கருதி விசேட புகையிரத சேவைகளை நடத்துவதற்கு இலங்கை புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த மாதம் 29ஆம் திகதி உதிக்கும் பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, அனுராதபுரம் மற்றும் மிகிந்தலைக்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக, தற்போது இயக்கப்படும் புகையிரதங்களுக்கு மேலதிகமாக இந்த விசேட புகையிரத சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, 2026/06/27ஆம் திகதி முதல் 2026/06/30ஆம் திகதி வரை இந்த விசேட புகையிரத சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
