தொடர் மழையால் நுவரெலியா மாவட்டத்தில் 2,112 குடும்பங்களைச் சேர்ந்த 8,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 தற்காலிக முகாம்களில் 504 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 11 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், நுவரெலியா மாவட்டத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
