Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு

ஆவணி 9, 2026
படிக்க 3 நிமிடங்கள்

 

கனகராஜா சரவணன்)

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பின்னால் நாடு முழுவதும் உண்மையான மக்கள் அலை திரண்டு கொண்டிருக்கின்றனர். எனவே அவர் ஜனாதிபதியாக நாட்டை பொறுப்பேற்பதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்.

மக்கள் அவருக்கு சரியான நேரத்தில் தீர்மானத்தை வழங்குவார்கள். எனவே அவர் தலைமையில் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் தன்னுடன் கை கோர்த்து பயணிக்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவி ஏற்றுக் கொண்ட ஜெஸ்மின் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் இருந்து இந்த நியமனத்தை பெற்றுக் கொண்டேன். இந்த தருணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் ஆசிர்வாதத்துடன் இந்த பொறுப்பை ஏற்றதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

அமைப்பாளர் பதவி என்பது ஒரு அதிகாரமிக்க பதவி அல்ல. இது மக்களுக்கான பொறுப்பாகவே நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டமானது பல சமூக இன மதம் சார்ந்த ஒரு கட்டமைப்பைக் கொண்ட மக்கள் வாழும் மாவட்டம்.

நாமல் ராஜபக்ஷவின் அரசியல் பணி எந்தவித சமூகத்துக்கும் முரண்பாடு இல்லாமல் அனைத்து சமூகத்தையும் இணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியல் நிலைப்பாட்டை புதிய அரசியல் கலாச்சாரத்தை கொண்டது. அதனை கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்களுக்கு உலகளாவிய ரீதியில் தொழில்நுட்பம் ஊடாக பல தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவுள்ளோம். அது மட்டுமல்லாது மீனவர்கள் விவசாயிகள் போன்ற மக்களின் பிரச்சினைக்கு, இடைக்கால தீர்வு இல்லாமல் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.

அதுமட்டுமல்ல கல்வி , அடிப்படை வசதி, உள்கட்டமைப்பு போன்ற பல அபிவிருத்தி விடயங்களை சரியாக கொண்டு செல்வதற்கு இலகுவான கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம்.

அதேவேளை எதிர்கால நாட்டின் வளர்சிக்காகவும் இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் மட்டக்களப்பு வளர்ச்சிக்காகவும் சூழலை உருவாக்க அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக தலைமைத்திற்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது

எனவே கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்குரியவர்களிடம் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.

அத்துடன் கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்தவும் கட்சியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு முன்னுதாரணமாக இருக்கும் அதற்கான முழு ஆதரவு வழங்குவதோடு எங்களை விமர்சிப்பவர்களை மதிப்பளிப்போம்.

அரசியல் என்பது கருத்து வேறுபாடு இருக்கலாம் அந்த கருத்து வேறுபாடு எந்தவொரு சமூகத்தையும் பாதிக்காது இருக்க வேண்டும் என்பதுடன் வார்த்தைகள் மட்டும் அல்லாது செயல்கள் மூலமாக மக்களுக்கு சேவை செய்யவே இந்த அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளேன்.

அதேவேளை மாவட்ட மக்களிடம் வேண்டிக் கொள்வது உங்கள் பிரச்சினைகள்,; ஆலோசனைகள், விமர்சனங்களை எங்களிடம் கூறுங்கள் அனைத்து கருத்திற்கும் மதிப்பளிப்பவனாக உங்களுடன் சேர்ந்து பயணிக்க தயாரகவுள்ளேன்

வெறுமனவே கட்சியை மட்டுப்படுத்தி வலுப்படுத்த வேண்டியதில்லை என்பதுடன் மாவட்டத்திலுள்ள இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிகாக ஈடுபடுவேன்

இந்த பதவியை உணர்வுடனும் பொறுப்புடனும் மாவட்ட வளர்ச்சி மற்றும் அனைவரது வளர்சிக்காக செயற்படுவேன் என்பதுடன் ஒரு புதிய அரசியல் கொள்கைக்காக வந்திருக்கின்றேன் எனவே மட்டுவாழ் மக்கள் அனைவரும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க என்னுடன் கை கோர்த்து பயணிக்கவும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது எனவே ஊடகங்களில் பேசுவதைவிட நீதிமன்றம் யார் குற்றவாளி என தீர்மானம் எடுக்கும் என குறிப்பிட்டார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரத்மலானை சைமா உட்பட மூவர் மலேசியாவில் கைது!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிப்பிட்டியவில் தீவிபத்து – 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடும்பத் தகராறு – கணவனை வெட்டி கொலை செய்த மனைவி

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube