அதிகாரபூர்வ விலையை விடவும் அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் ஹெட்டிபொல பகுதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
இதன்போது, குறித்த மூன்று நிறுவனங்களுக்கும் எதிராக தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொருட்களின் விலைகளை முறையாகக் காட்சிப்படுத்தாத வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.
