பிரிக்ஸ் அமைப்பின் 18ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியான் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2024ஆம் ஆண்டு முழு உறுப்பினர்களாக இணைந்தன. பின்னர் 2025ஆம் ஆண்டு இந்தோனேசியாவும் இணைந்ததையடுத்து, அமைப்பின் முழு உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
