கடந்த வியாழக்கிழமை நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஷிரான் பாசிக்கைத் தொடர்ந்து இன்னொரு முக்கியமான, தேடப்பட்டுவரும் திட்டமிட்ட குற்றக்குழு முக்கியஸ்தரான கஞ்சிப்பானை இம்ரானும் இலங்கைக்கு விரைவில் அழைத்துவரப்படுவார் என்று அமைச்சர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
2023இல் இருந்து தேடப்பட்டுவரும் கஞ்சிப்பானை இம்ரான் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என்ற தகவலை நேற்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்தே குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அவரது கைது பற்றி இதுவரை எந்தவொரு செய்தியும் வெளிவராத நிலையில் பிரதி அமைச்சரின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில சமூகவலைத்தளச் செய்திகளில் கஞ்சிப்பானை இம்ரான் இத்தாலியில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
