வவுனியா, மடுகந்தை – மயிலங்குளம் பகுதியில் வீடு ஒன்றை உடைத்து உள்நுழைந்து, 51 வயதுடைய பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வீட்டில் இருந்த சாரதி ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்கானதாகவும், வீட்டின் உரிமையாளரான பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கற்கள், 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் காணி, வீட்டு உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்டவை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டைத் தொடர்ந்து செயற்பட்ட வவுனியா பொலிஸார், ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
முதற்கட்டமாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கற்கள், தங்க நகைகள், ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களும், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
