வெல்லம்பிட்டி பகுதியில் 180 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (19) மாளிகாவத்தை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய விசேட முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 180 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 08 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லம்பிட்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
