கோட்டை – யோர்க் வீதியில் பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளது.
யோர்க் வீதியில் பாதசாரி கடவையைப் பயன்படுத்தி குறித்த வெளிநாட்டுப் பிரஜை வீதியைக் கடக்க முற்பட்ட போது, புறக்கோட்டை நோக்கி அதிவேகமாகப் பயணித்த பேருந்து ஒன்று அவர் மீது பலமாக மோதியுள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த அவர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் அடையாள விவரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியைக் கோட்டை பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
