யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள வீடென்றல் புகுந்து திருடர்கள் அந்த வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டின் சமையலறை ஊடாக புகுந்து பணத்தை பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டு உரிமையாளர் சீட்டு பிடிக்கும் தொழில் செய்பவர் என்றும், நேற்றைய தினம் சனிக்கிழமை சீட்டு பணத்தொகை சேர்க்கப்பட்ட நிலையில், ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் காலையில் எழுந்த போது வீட்டின் முன் பக்க கதவுகள் திறந்து இருப்பதனை அவதானித்து, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
