கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெறும் சுற்றுலா இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்திய அணி சார்பில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய தேவ்தத் படிக்கல் சதம் கடந்து 117 ஓட்டங்களைப் பெற்றார்.
அத்துடன் தலைவர் சுப்மன் கில் 50 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ரிஷப் பண்ட் 3 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது காயம் காரணமாக ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.
ஆட்டநேர முடிவில் துருவ் ஜூரெல் 7 ஓட்டங்களுடனும் சாரான்ஷ் ஜெயின் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அசித பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார மற்றும் கேஷர நுவந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
