கம்பளை – டெல்டாவத்த பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து அவ்வீட்டில் இருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ (Hydrogen Peroxide) என்ற இரசாயனத்தை பருகியதால் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் ஜன்னல் படியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து அருந்தியுள்ளார்.
சிறுமியை உடனடியாகக் கம்பளை மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
