கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 22 பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை கிளிநொச்சி – யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 22 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் பலியானதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் குறித்த புகையிரதக் கடவையின் சமிக்ஞை முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
புகையிரதக் கடவையின் சமிக்ஞை அமைப்பு தொடர்பில் ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் கவலை நிலவியதாகவும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன
