காலி – கல்வல பகுதியில் நேற்று (28) இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
பழைய பகை காரணமாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறினால் இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோதலின் போது காயமடைந்த மேலும் இருவர் சிகிச்சைக்காகக் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வளவ்வத்த பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 29 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கொலைச் சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
