முத்துராஜவெல பகுதியில் வெள்ளிக்கிழமை (28) பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 2646 லீற்றர் கோடா (பீப்பாய்கள் 14) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த 23 வயது நபர் ஆவார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
