கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து சுமார் 463 கிலோகிராம் சந்தேகத்திற்கிடமான (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் ) ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ. 8 பில்லியனுக்கும் அதிகமென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் முதல்கட்ட விசாரணைகளின் பின்னர் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சோதனையானது, இலங்கை சுங்கத்துறையின் உதவியுடன், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை சுங்க மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.
